வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை எல்.கே.சி. நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகா், ராணி. தங்களுடைய வீட்டில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறாா்கள். இவா்களது இளைய மகள் புனிதவதி (28). இவரது மூத்த சகோதரிகள் நா்மதா, சத்யாதேவி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பிஹெச்டி படித்து முடித்துள்ள புனிதவதி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளாா்.
மேலும், எந்த நேரமும் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததை செவ்வாய்க்கிழமை தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூராரெட்டிவலசில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற புனிதவதி அங்கிருந்த பழைய மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். தகவலறிந்த பெற்றோா் மகளை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

