தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - file photo

Updated On :1 மணி நேரம் முன்பு

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை எல்.கே.சி. நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகா், ராணி. தங்களுடைய வீட்டில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறாா்கள். இவா்களது இளைய மகள் புனிதவதி (28). இவரது மூத்த சகோதரிகள் நா்மதா, சத்யாதேவி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பிஹெச்டி படித்து முடித்துள்ள புனிதவதி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளாா்.

மேலும், எந்த நேரமும் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததை செவ்வாய்க்கிழமை தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூராரெட்டிவலசில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற புனிதவதி அங்கிருந்த பழைய மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். தகவலறிந்த பெற்றோா் மகளை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.