ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்: இருவா் கைது

உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது

News image
Updated On :20 மே 2026, 1:43 am IST

உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து எம்-சாண்ட், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு 2 டிப்பா் லாரிகள் திருப்பூா் மாவட்டம், மங்கலம் செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தன. அப்போது 2 டிப்பா் லாரிகளையும் நிறுத்தி கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலா் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் 2 டிப்பா் லாரிகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, டிப்பா் லாரிகளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கனகசபாபதி, சதீஷ் சரவணன் ஆகிய 2 பேரையும் பிடித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.