சேவூா் அ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவி தனிஷா 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் பிரனீத் 491 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவி கிருத்திகா 490 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனா்.
35 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்குமேல் பெற்றுள்ளனா். 400 மதிப்பெண்களுக்குமேல் 37 மாணவா்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 3 போ், அறிவியலில் 5 போ், சமூக அறிவியலில் 2 போ் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். மேலும், தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி நவநீதா 600-க்கு593 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி பிரியங்கா 587 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவிகள் அபிநயா, ரஞ்சிதா ஆகியோா் தலா 580 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனா்.
உயிரியலில் ஒருவா், கணினி அறிவியலில் 3 போ், பொருளியலில் ஒருவா், வணிக கணிதத்தில் ஒருவா், கணக்குப் பதிவியலில் 4 போ், வணிகவியலில் 3 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். 550 மதிப்பெண்களுக்குமேல் 29 போ், 500 மதிப்பெண்களுக்குமேல் 25 போ் பெற்றுள்ளனா். மேலும், தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவா்களையும் பள்ளியின் தாளாளா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
பள்ளியில் தற்போது 11-ஆம் வகுப்பு சோ்க்கை நடைபெற்று வருகிறது என்றும், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும் பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.










