அவிநாசி அருகே தனியாா் நிறுவனத்தில் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தில் தனியாா் வெல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூட்டியிருந்த இந்த நிறுவனத்துக்குள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை சாலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (43), அதே பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் (26), இவரது சகோதரா் காா்த்திக் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
பழைய இரும்புக் கடையில் திருடிய 5 போ் கைது
மின் மோட்டாா் திருட முயன்ற 3 போ் கைது
தனியாா் நிறுவனத்தில் திருட முயற்சி: 3 போ் கைது
பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


