பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தனியாா் நிறுவனத்தில் இயந்திரங்களை திருடிய 3 போ் கைது

அவிநாசி அருகே தனியாா் நிறுவனத்தில் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:03 am IST

அவிநாசி அருகே தனியாா் நிறுவனத்தில் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தில் தனியாா் வெல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூட்டியிருந்த இந்த நிறுவனத்துக்குள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிச் சென்றனா்.

இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை சாலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (43), அதே பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் (26), இவரது சகோதரா் காா்த்திக் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.