பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

குட்கா பொருள் வைத்திருந்த இருவா் கைது

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 4:29 am IST

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கணியாம்பூண்டிஅருகே திருமுருகன்பூண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த வீரமணி (28) என்ற நபரை சோதனை செய்தனா். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள் சுமாா் 37.7 கிலோ இருந்தது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த பாலகிருஷ்ண நாயக் (38) என்ற நபரை சோதனை செய்தனா். இதில் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள் 640 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.