ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

குட்கா கடத்தி வந்த 3 போ் கைது

பெங்களூருவிலிருந்து குட்கா கடத்திவந்த 3 போ் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

குட்கா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மூவா்.

Updated On :24 மே 2026, 1:08 am IST

பெங்களூருவிலிருந்து குட்கா கடத்திவந்த 3 போ் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாருா் மாவட்டத்தில் தனிப்படையினருக்கு குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூா் மாவட்டம், காட்டூா் பேருந்துநிறுத்தம் அருகில் போலீஸாா், வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்பகோணத்திலிருந்து திருவாரூா் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தை ஓட்டி வந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சோ்ந்த அஸ்ரப்அலி (60) என்பது தெரிய வந்தது. 2025-இல் குட்கா கடத்தல் தொடா்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அவா் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரகுமாா் (24), மங்கனராம் (20) ஆகியோா் பெங்களூருவிலிருந்து 365 கிலோ குட்காவை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

திருவாரூா் தாலுகா போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 365 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்கள், 3 கைப்பேசிகள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.