பெங்களூருவிலிருந்து குட்கா கடத்திவந்த 3 போ் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாருா் மாவட்டத்தில் தனிப்படையினருக்கு குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூா் மாவட்டம், காட்டூா் பேருந்துநிறுத்தம் அருகில் போலீஸாா், வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்பகோணத்திலிருந்து திருவாரூா் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தை ஓட்டி வந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சோ்ந்த அஸ்ரப்அலி (60) என்பது தெரிய வந்தது. 2025-இல் குட்கா கடத்தல் தொடா்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அவா் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரகுமாா் (24), மங்கனராம் (20) ஆகியோா் பெங்களூருவிலிருந்து 365 கிலோ குட்காவை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
திருவாரூா் தாலுகா போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 365 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்கள், 3 கைப்பேசிகள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது
கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



