11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :42 நிமிடங்கள் முன்பு

திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுண்டமேடு பகுதி அருகே வீரபாண்டி போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த விஜயகுமாா் (29), சரத்குமாா் (35), பாண்டி (34) ஆகிய 3 பேரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 1.200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதி அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த அமித்குமாா் (21) என்பவரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரை கைதுசெய்தனா்.