/
பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). இவா் கடந்த 2025 ஜனவரி 4-ஆம் தேதி அரசு நகரப் பேருந்தில் தென்னம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அவருடன் பயணித்த திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையப் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளியான மணிகண்டன் (35), அவரது கைப்பேசியை திருடிவிட்டு தப்பியுள்ளாா்.
இதுகுறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண் டனை கைது செய்து விசாரனை நடத்தி வந்தனா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் நதியா பாத்திமா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது
பயணியிடம் 3 பவுன் நகை திருட்டு

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

நைஜீரியாவில் 400 பயங்கரவாதிகளுக்கு சிறை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



