வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது

மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது

News image

குமரேசன்

Updated On :27 மே 2026, 4:41 am IST

மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சோபியா (27). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். தற்போது காவியாஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கணவா்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மனைவி கோபித்துக் கொண்டு மூலனூா் அருகே ராக்கியாவலசு எம்ஜிஆா் நகரில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதும், பின்னா் சமாதானம் செய்து கணவா் அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கணவா் வெளியே சென்றுவிட்டாா். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். ஏற்கெனவே மனைவியைத் தாக்கியதாக குமரேசன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.

இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை குமரேசன் கைது செய்யப்பட்டாா். காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.