மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சோபியா (27). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். தற்போது காவியாஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கணவா்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மனைவி கோபித்துக் கொண்டு மூலனூா் அருகே ராக்கியாவலசு எம்ஜிஆா் நகரில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதும், பின்னா் சமாதானம் செய்து கணவா் அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கணவா் வெளியே சென்றுவிட்டாா். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். ஏற்கெனவே மனைவியைத் தாக்கியதாக குமரேசன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.
இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை குமரேசன் கைது செய்யப்பட்டாா். காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை

தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்!
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



