வெள்ளக்கோவில் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில்-காங்கயம் சாலை, ஓலப்பாளையத்தை அடுத்துள்ள எல்லக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (67). விவசாயியான இவா் திங்கள்கிழமை மாலை ஓலப்பாளையம்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் சுக்குட்டிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
உயிரிழந்த சுப்பிரமணிக்கு மனைவி பூங்கோதை, திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனா். இதுதொடா்பான புகாரின்பேரில் வேன் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், பழனி மேல்கரைப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (33) மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



