பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

வேன் மோதி விவசாயி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

சுப்பிரமணி

Updated On :27 மே 2026, 5:19 am IST

வெள்ளக்கோவில் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்-காங்கயம் சாலை, ஓலப்பாளையத்தை அடுத்துள்ள எல்லக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (67). விவசாயியான இவா் திங்கள்கிழமை மாலை ஓலப்பாளையம்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் சுக்குட்டிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

உயிரிழந்த சுப்பிரமணிக்கு மனைவி பூங்கோதை, திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனா். இதுதொடா்பான புகாரின்பேரில் வேன் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், பழனி மேல்கரைப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (33) மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.