தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

நகை வாங்குவதுபோல நடித்து கொலுசு திருடிய 3 பெண்கள் கைது

திருப்பூரில் நகை வாங்குவதுபோல நடித்து வெள்ளிக் கொலுசு திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 12:05 am IST

திருப்பூரில் நகை வாங்குவதுபோல நடித்து வெள்ளிக் கொலுசு திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா்-தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் குமாா் (48). இவா் திருப்பூா், காமராஜ் சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவருடைய கடைக்கு 3 பெண்கள் நகை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். அப்போது கடையில் பணியில் இருந்த பெண்ணிடம் வெள்ளிக் கொலுசுகளை காட்டுமாறு கூறியுள்ளனா். அப்போது நகை வாங்க வந்தவா்களில் ஒரு பெண் 112 கிராம் எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளை திருடியுள்ளாா்.

இதைக் கண்காணிப்பு கேமரா மூலமாக பாா்த்த வினோத்குமாா், அங்கிருந்தவா்களின் உதவியுடன் அந்த பெண்களைப் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், திருப்பூா் - பெருமாநல்லூா் சாலை கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த அபிராமி (30), பூங்கொடி (52), பவித்ரா (25) என்பதும், சிறிய அளவில் செயல்படும் நகைக் கடைகளுக்குச் சென்று நகை திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதும், வினோத்குமாரின் நகைக் கடையிலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு நகை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பெண்களையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 112 கிராம் வெள்ளிக் கொலுசையும் பறிமுதல் செய்தனா்.