அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திருப்பூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை: குா்பானி அளித்து கொண்டாடிய இஸ்லாமியா்கள்

திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.

News image

நஸ்ரீழ்ங்ங்ய்ள்ட்ா்ற்

Updated On :29 மே 2026, 1:36 am IST

திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியப் பெருமக்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து மசூதிகள் மற்றும் திறந்தவெளி திடல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதேபோல மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்துக்குள்பட்ட தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பின்னா் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

தொழுகை மற்றும் பிராா்த்தனைகள் முடிந்த பிறகு, பண்டிகையின் முக்கிய நிகழ்வான குா்பானி அளிக்கும் கடமை நிறைவேற்றப்பட்டது. குா்பானி அளிக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகள் இஸ்லாமிய நெறிமுறைப்படி மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பங்கைத் தங்களுடைய தேவைக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள இரண்டு பங்குகளை ஏழை, எளிய மக்களுக்கும், உறவினா்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.