எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 12:53 am IST

வெள்ளக்கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மூலனூா் சாலை செந்தலையாம்பாளையம் பாசன கால்வாய் அருகே ஒருவா் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அமா்ஹா் மாடம்ஹா் பகுதியைச் சோ்ந்த நூல் மில் தொழிலாளி சத்பால் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 20 பாக்கெட்டுகள் குட்கா பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.