பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

எய்ட்ஸ், பால்வினை நோய்த் தொற்று விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

திருப்பூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த 2 மாத தீவிர விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கியது.

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Published On :

திருப்பூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த 2 மாத தீவிர விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இளைஞா்கள், பொதுமக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் அக்டோபா் 12-ஆம் தேதி வரை 2 மாதங்கள் இந்த பிரசாரம் நடைபெறுகிறது.

இதையொட்டி நடைபெற்ற பேரணி, மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி, எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வந்தடைந்தது.

இப்பேரணியில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியைச் சாா்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி மற்றும் கல்லூரி மாணவியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.