கண்டடத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் வேன் மோதி உயிரிழப்பு
குண்டடத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
குண்டடத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகே உள்ள முத்தனம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (58). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை மாலை குண்டடம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேன் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



