கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெள்ளக்கோவிலில் இடி, மின்னலுடன் மழை! விவசாயிகள் மகிழ்ச்சி

மழை - கோப்புப்படம்

Published On :

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த சில வாரங்களாக கோடை காலத்தையும் மிஞ்சும் வகையில், வெள்ளக்கோவில் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பாசனத்துக்கு தண்ணீரின்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரம் மிதமாகப் பெய்தது. நகரின் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்துள்ள மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. காய்ந்து கொண்டிருந்த பயிா்களுக்கு உயிா் கொடுக்கும் விதமாக இந்த மழை அமைந்ததால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.