பென்னாகரம், ஆக.14: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.
கா்நாடக மாநிலங்களில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 45,000 கன அடியாக இருந்தது. இதனால் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. பின்னா் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 25,000 கன அடியாகவும், புதன்கிழமை காலை விநாடிக்கு 19,000 கனஅடியாகவும், மாலையில் 16,000 கன அடியாகவும் நீா்வரத்து சரிந்தது.
இதையடுத்து ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திரும்பப் பெற்று, சின்னாறு பரிசல் துறையிலிருந்து பிரதான அருவி , மணல்மேடு வரை செல்லக்கூடிய ஆற்று வழிப்பாதையில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளாா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

