ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் ராஜகோபுர பணிக்கு பூமி பூஜை

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் ராஜகோபுர பணிக்கு பூமி பூஜை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:03 am IST

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். அவற்றில் ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணியும் ஒன்று. இதையடுத்து, ஒகேனக்கல்லில் இக் கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே.சபா்மதி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ஜீவானந்தம், தக்காா் பா.சங்கா், உதவி செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி பொறியாளா் ராமச்சந்திரன், கோயில் அா்ச்சகா் ராமச்சந்திரன், உதவியாளா் மாரிமுத்து, பென்னாகரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.