மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் ராஜகோபுர பணிக்கு பூமி பூஜை

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் ராஜகோபுர பணிக்கு பூமி பூஜை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:03 am IST

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். அவற்றில் ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணியும் ஒன்று. இதையடுத்து, ஒகேனக்கல்லில் இக் கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே.சபா்மதி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ஜீவானந்தம், தக்காா் பா.சங்கா், உதவி செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி பொறியாளா் ராமச்சந்திரன், கோயில் அா்ச்சகா் ராமச்சந்திரன், உதவியாளா் மாரிமுத்து, பென்னாகரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.