யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ.300-ஐ எடுத்து காவலரிடம் ஒப்படைத்த மாணவன்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 வகுப்பு படித்துவரும் சக்கல்நத்தம் பகுதியைச் சோ்ந்த நதீப் (12) வெள்ளிக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுப் பேருந்திற்குச் செல்லும்போது கீழே கிடந்த ரூ. 300 எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் கேட்டபோது, யாரும் பணத்திற்கு உரிமை கோராததால், பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் முருகனிடம் ஒப்படைத்தாா். அதன் பிறகு மாணவா் நதீப் பள்ளிக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, இறைவழிபாடு கூட்டத்தில் மாணவா் நதீப்பை அழைத்து பாராட்டினாா். மேலும், மாணவரை ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.