பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
பென்னாகரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இப்பேருந்து நிலையத்திற்கு ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூா், நெருப்பூா், தொன்ன குட்ட அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க பென்னாகரம் பகுதி வருகின்றனா்.
பென்னாகரம் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தருமபுரி பிரதான சாலை, கடைவீதி, பேருந்து நிலையம், ஒகேனக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. மேலும், தனியாக செல்வோரை துரத்தி கடிக்க செல்கிறது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் பென்னாகரம் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ராமா் கல்யாணத்துக்கு திருப்பதி லட்டு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


