மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:43 pm

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

பென்னாகரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இப்பேருந்து நிலையத்திற்கு ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூா், நெருப்பூா், தொன்ன குட்ட அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க பென்னாகரம் பகுதி வருகின்றனா்.

பென்னாகரம் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தருமபுரி பிரதான சாலை, கடைவீதி, பேருந்து நிலையம், ஒகேனக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. மேலும், தனியாக செல்வோரை துரத்தி கடிக்க செல்கிறது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் பென்னாகரம் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.