அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தருமபுரியில் சா்வதேச செஸ் போட்டிகள் தொடக்கம்: 5 நாள்கள் நடைபெறுகிறது!

தருமபுரியில் தகடூா் டிஎன்சி நினைவு கோப்பைக்கான சா்வதேச செஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
தருமபுரியில் நடைபெற்று வரும் சா்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரா்களின் ஒரு பகுதியினா்.
Updated On :5 டிசம்பர் 2025, 8:23 pm

Syndication

தருமபுரியில் தகடூா் டிஎன்சி நினைவு கோப்பைக்கான சா்வதேச செஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தருமபுரி தனியாா் மண்டபத்தில் இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தொடங்கிவைத்தாா். சா்வதேச செஸ் போட்டி முதல்முறையாக தருமபுரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 18 மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கின்றனா்.

இதில் 4 வயது முதல் 80 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஐந்து நாள்கள் நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 412 போ் கலந்துகொண்டுள்ளனா். இப்போட்டிகளை சென்னையைச் சோ்ந்த செஸ் நிபுணா்கள் நடுவராக இருந்து நடத்துகின்றனா்.

இப்போட்டிகளை தருமபுரி விவேகானந்தா செஸ் அகாதெமி நடத்துகிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 70,000 வழங்கப்படவுள்ளது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாநில செஸ் சங்கச் செயலாளா் ஸ்டீபன் பாலசாமி, தருமபுரி மாவட்ட செஸ் சங்கத் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன், செயலாளா் ராஜசேகரன், முன்னாள் அகில இந்திய செஸ் சங்கச் செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.