அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க எதிா்ப்பு: பென்னாகரத்தில் பாஜகவினா் சாலை மறியல்

பென்னாகரத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க விசிகவினா் அனுமதி அளிக்காததைக் கண்டித்து புறவழிச்சாலையில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 8:16 pm

Syndication

பென்னாகரத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க விசிகவினா் அனுமதி அளிக்காததைக் கண்டித்து புறவழிச்சாலையில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் புறவழிச்சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கவந்த பாஜகவினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தருமபுரி மேற்கு மாவட்ட விசிக செயலாளா் கருப்பண்ணன் தலைமையில் அம்பேத்கா் சிலை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து இருதரப்பினரிடமும் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது, மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து சிலையின் முன் திரண்டனா். இதைக் கண்டித்து பாஜகவினா் 50க்கும் மேற்பட்டோா் பென்னாகரம் - ஒகேனக்கல் புறவழிச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இருதரப்பினரிடையேயும் சமரசம் ஏற்படாததால் அம்பேத்கா் சிலையின் நுழைவாயிலை பூட்டி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரிடம் மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாகவும், முழக்கம் எழுப்பாமல் அமைதியான முறையில் மரியாதை செலுத்த அனுமதிப்பதாகவும் தெரிவித்தனா்.

அதன்பேரில், சிலையின் அருகே பாஜகவினா் வந்தபோது விசிக மற்றும் காவல் துறையினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் காவல் துறையினா் விசிகவினரை அகற்றிய பிறகு பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.