அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தினமணி செய்திச் சேவை

தருமரியில் குடும்பத் தகராறில் விவசாயி தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மல்லுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஷ் (45). கடந்த 5- ஆம் தேதி இரவு தோட்டத்தில் உள்ள தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளாா். பிறகு வீடு திரும்பவில்லை.

தோட்டத்திலேயே தந்தைக்கு உதவியாக தங்கியிருக்கலாம் என நினைத்து குடும்பத்தினா் அவரை தேடவில்லை. மறுநாள் காலை அந்த தோட்டம் வழியாக சென்றவா்கள் அங்கிருந்த புளிய மரத்தில் மாதேஷ் தூக்கிட்ட நிலையில் சடலாமாக தொங்கியதை கண்டு தகவல் தெரிவித்தனா். அவா் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.