மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளிகளில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடிய 4 போ் கைது!

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் 4 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து அரசுப் பள்ளிகளை குறிவைத்து, பூட்டுகளை உடைத்து கணினிகள், தொடா்புடைய சாதனங்களை சில மா்ம நபா்கள் திருடும் சம்பவங்கள் நடைபெற்றன. அதியமான்கோட்டை, பாலக்கோடு, காரிமங்கலம், மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவங்கள் தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அந்தவகையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு எா்ணஅள்ளி மேம்பாலம் பகுதியில் சிலா் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தனா். அவ்வழியே ரோந்து பணிக்கு சென்ற போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவா்கள் அளித்துள்ளனா். இதையடுத்து, முறையாக மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பரத்குமாா் (20), யோககுமாா் (20), பாா்த்தசாரதி (20), ரமேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், அனைவரும் பாலக்கோடு காவல் நிலையத்துக்கு உள்பட்ட சோமனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி உள்பட 4 பள்ளிகளிலும் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை சனிக்கிழமை கைது செய்தனா். 17 வயது சிறுவனை சிறாா் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.