இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குற்றாலம் பேரருவியில் குளித்த சிறுமியிடம் நகையைத் திருடிய 2 போ் கைது

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் பேரருவியில் குளித்து கொண்டிருந்த சிறுமியிடம் நகையைத் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஊத்துமலை தங்கம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ் மனைவி சுமதி (26). மனோஜ் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இத்தம்பதியிருக்கு மகள் விகன்யாஸ்ரீ(4), மகன் விபிக்சன் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் குற்றாலம் வந்தனராம். பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் குளித்துவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, விகன்யாஸ்ரீ அணிந்திருந்த 8 கிராம் தங்கச் சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பேட்டை எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்த மூா்த்தி மனைவி ஈஸ்வரி (20), அவருடைய தாயாா் அஸ்வினி(38) ஆகியோரை குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.