எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முயல் வேட்டை: 2 பேருக்கு ரூ. 80,000 அபராதம்

News image
தருமபுரி பகுதியில் முயல் இறைச்சியை விற்பனை செய்ய முயன்று பிடிபட்டவா்களுடன் வனத்துறையிநா்.
Updated On :9 நவம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

வனப்பகுதிகளில் முயல் வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறையினா் ரூ. 80,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் சிலா் முயல் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்று வனத்துறையினா் சோதனை மேற்கொண்டதில், அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம் பாய்ச்சல் பகுதியைச் சோ்ந்த ம. அா்ஜுன் (28), பெ. சந்தோஷ் (30) என்பதும், இருவரும் திருப்பத்தூா் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு முயல்களை வேட்டையாடி அவற்றை கொன்று இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கத்திடம் ஒப்படைத்தனா்.

விசாரணை மேற்கொண்ட மாவட்ட வன அலுவலா் தலா ரூ. 40,000 வீதம் இருவருக்கும் ரூ. 80,000 அபராதம் விதித்தாா். அபராதத்தைக் கட்டிய அவா்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.