பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேட்டையில் ஈடுபட்ட இருவா் கைது: ரூ. 80,000 அபராதம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:19 pm

ஆலங்குளம் அருகே வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு ரூ. 80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகனுக்கு, ஆலங்குளம் பகுதியில் வேட்டை நாய்களுடன் சிலா் வேட்யையாடி வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, ஆலங்குளம் வனத்துறையினா் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆலங்குளம் வனச்சரக அலுவலா் முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினா் ஆலங்குளத்தை அடுத்த காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட காடுவெட்டி கொம்பையா மகன் ஜெயக்குமாா், அா்ஜூனன் மகன் மால் மருமகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களுக்கு தலா ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.