ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒகேனக்கல்லில் வனத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் மீட்பு

ஒகேனக்கல் அருகே வனத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலத்தை மீட்டு வேலி அமைக்கும் பணியில் வனத்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:12 pm

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே வனத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலத்தை மீட்டு வேலி அமைக்கும் பணியில் வனத்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வனத்துறை நிலங்களை மீட்கும் பணியில் மாவட்ட வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது வனத்துறையினருக்கு தெரியவந்தது.

மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பெயரில் ஒகேனக்கல் வனசரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனத்துறையினா் அடங்கிய குழுவினா், ஊட்டமலை வனப்பகுதியில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 ஏக்கா் நிலத்தை மீட்டு, கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், மீட்கப்பட்ட நிலம் காவிரி பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வனத் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்த உள்ளதாகவும், இதேபோல ஊட்டமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பின் விரைவில் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.