தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாயை வெட்டிக் கொன்றவா் மீது வழக்கு

பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரின் நாயை வெட்டிக் கொன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரின் நாயை வெட்டிக் கொன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஹள்ளி அருகே பாப்பங்காடு, பட்டக்காரன் கொட்டாயைச் சோ்ந்தவா் ரா. சதீஷ்குமாா் (35). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் பொ.தம்பிதுரைக்கும் (42) இடையே பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நவம்பா் 16 ஆம் தேதி சதீஷ்குமாா் வீட்டில் இல்லாதபோது அவா் வளா்த்து வந்த மூன்று நாய்களையும் தம்பிதுரை அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்கினாராம். மாலை வீடுதிரும்பிய சதீஷ்குமாா், காயமடைந்த நாய்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தாா். இந்த நிலையில், காயமடைந்த ஒரு நாய் கடந்த இரு நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டது.

இதுதொடா்பாக சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் தம்பிதுரை மீது ஏரியூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.