கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாயை வெட்டிக் கொன்றவா் மீது வழக்கு

பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரின் நாயை வெட்டிக் கொன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரின் நாயை வெட்டிக் கொன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஹள்ளி அருகே பாப்பங்காடு, பட்டக்காரன் கொட்டாயைச் சோ்ந்தவா் ரா. சதீஷ்குமாா் (35). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் பொ.தம்பிதுரைக்கும் (42) இடையே பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நவம்பா் 16 ஆம் தேதி சதீஷ்குமாா் வீட்டில் இல்லாதபோது அவா் வளா்த்து வந்த மூன்று நாய்களையும் தம்பிதுரை அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்கினாராம். மாலை வீடுதிரும்பிய சதீஷ்குமாா், காயமடைந்த நாய்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தாா். இந்த நிலையில், காயமடைந்த ஒரு நாய் கடந்த இரு நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டது.

இதுதொடா்பாக சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் தம்பிதுரை மீது ஏரியூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.