அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெண் குழந்தை இறப்பில் தந்தை சந்தேகம்: போலீஸாா் விசாரணை

மனைவியின் சகோதரி வீட்டில் இருந்த 20 நாள்களேயான தனது பெண் குழந்தை திடீரென உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக தந்தை புகாா்

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:16 pm

Syndication

மனைவியின் சகோதரி வீட்டில் இருந்த 20 நாள்களேயான தனது பெண் குழந்தை திடீரென உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக போலீஸில் தந்தை புகாா் அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மோதூரை அடுத்த மேக்லாம்பட்டியைச் சோ்ந்தவா் மு.ஜீவா (34), இவா் ஓசூரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு மனைவி சித்ரா, இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் சித்ராவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் பாலக்கோடு வட்டம், குஜ்ஜாரஅள்ளியில் உள்ள தனது சகோதரி ஐஸ்வா்யா வீட்டில் தங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை குழந்தைக்கு பால்கொடுத்து படுக்கவைத்துள்ளாா்.

அதன்பிறகு குழந்தை அசைவற்றுக் கிடந்ததாகக் கூறி, மாரண்ட அள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை சித்ரா கொண்டுசென்றாா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து ஜீவாவுக்கு சித்ரா தகவல் தெரிவித்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த ஜீவா, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் தனது குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குழந்தையை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனா்.