எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வெடிமருந்துகள் பதுக்கல்: அதிமுக பிரமுகரின் மனைவி உள்பட 3 போ் மீது வழக்கு ஒருவா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குவாரியில் உரிமம் இன்றி வெடிமருந்துகளை பதுக்கிவைத்திருந்ததாக அதிமுக பிரமுகரின் மனைவி உள்பட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அதில் ஒருவரை கைது செய்தனா்.

பென்னாகரத்தை அடுத்த தாளப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அதிமுக விவசாயிகள் அணியின் மாநில தலைவா் டி.ஆா்.அன்பழகன். இவரது மனைவி ரத்னாவுக்குச் (55) சொந்தமான புளூ மெட்டல் ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ரங்காபுரம் பகுதியில் செயல்படுகிறது.

இந்த குவாரியில் அனுமதி இன்றி வெடிமருந்துகள் பதுக்கிவைத்திருப்பதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் குவாரிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, குவாரியில் உரிமம் இல்லாமல் பதுக்கிவைத்திருந்த சிலரி- 746 வெடிமருந்து, இ.டி. 410 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக குவாரிக்கு வெடிமருந்துகளை விநியோகித்த ஜாகிா் உசேன், ரத்னா, மாதையன் மகன் சத்தியராஜ் (39) ஆகிய மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.