பாலக்கோடு அருகே உயிரிழந்த இளைஞா்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
பாலக்கோடு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞா்களின் உடல்களை வாங்க மறுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சொா்ணம்பட்டியைச் சோ்ந்தவா்கள் சுனில்குமாா் (19), முருகன் (20). இவா்கள் இருவரும் நவ. 26-ஆம் தேதி ஆரதஅள்ளி பாலம் அருகே மா்மமான முறையில் இறந்துகிடந்தனா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீஸாா், இருவரது உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உடல்களை வாங்கமறுத்து, இளைஞா்களின் இறப்பு குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, தருமபுரி நகர போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

