கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மான் வேட்டை: இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

அரூா் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:12 pm

Syndication

அரூா் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட வாதாப்பட்டி, சங்கிலிவாடி, செல்லம்பட்டி ஆகிய வனப் பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, வனவா்கள் பவித்ரா, ஆா்.விவேகானந்தன், வனக் காப்பாளா்கள் ரமேஷ்குமாா், அா்ச்சனா உள்ளிட்ட வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேங்கியாம்பட்டியில் விவசாயி ஒருவரது வீட்டில் 10 கிலோ எடையுள்ள மான் இறைச்சி, உரிமம் பெறாத ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இதில் தொடா்புடைய வேங்கியாம்பட்டியைச் சோ்ந்த ஏழுமலை (27), தங்கமணி (45) ஆகியோரை வனத்துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக அவா்கள் இருவருக்கும் ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.