காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:51 am IST

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். மாநில தலைவா் ச.இளங்குமரன் மாவட்டச் செயலாளா் வெ.தருமன் பொருளாளா் கே.வினோத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் பி.பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்புப் படியை உயா்த்தி வழங்க வேண்டும். தொடா்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலா்களாக பணிபுரிந்து பதவிஉயா்வு பெற்று புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ஊராட்சி செயலா் பதவிக்கான சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.