தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்! - கே.பி. அன்பழகன் எம்எல்ஏ

News image

பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :6 ஏப்ரல் 2026, 7:35 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பாலக்கோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக சென்று பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் ஒரேநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

இதில், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன.

இந்த ஐந்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள். அதேபோல, தமிழகத்தில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.