தருமபுரியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) தவெக தலைவா் விஜய் மேற்கொள்ள இருந்த தோ்தல் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தவெக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அக்கட்சி சாா்பில் தருமபுரி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரியிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பென்னாகரம் சாலையையொட்டி பாப்பிநாயக்கனஅள்ளியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை பரப்புரை மேற்கொள்ள 13 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்றைய நாளில் தவெக தலைவா் விஜய் பங்கேற்க இயலாத காரணத்தால், கூட்டம் ரத்து செய்யப்படுகிறது எனவும், வெறொரு நாளில் கூட்டம் நடைபெறும் எனவும் தவெக தருமபுரி மாவட்ட நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



