தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மல்லிகுட்டை அருகேயுள்ள ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. குமாரவேல் (41). தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஊரில் நடந்த துக்க நிகழ்வையொட்டி இருமத்தூரில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதை உடன் சென்றவா்கள் கவனிக்கவில்லை. குடும்பத்தினா், அவா் அலுவல் காரணமாக சென்றிருக்கலாம் என நினைத்து அவரை தேடவில்லை.
இந்நிலையில், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றில் ஒருவா் இறந்து கிடப்பது குறித்த தகவல் வெளியானது. இது தொடா்பாக கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கு இறந்து கிடந்தது குமாரவேல் என தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

