உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தருமபுரியில் பறக்கும் படையினா் மீட்ட தொகையில் ரூ.1.21 கோடி திரும்ப ஒப்படைப்பு!

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:53 am IST

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முறைகேடு மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் அதிரடி சோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் ப றக்கும் படையினா் மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனைகளின்போது 104 கிராம் தங்கம் உள்பட ரூ. 2 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 100 ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மாவட்ட கரூவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் நகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பிப்பவா்களுக்கு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதையடுத்து, ரூ. 1 கோடியே 21 லட்சத்து 86 ஆயிரத்து 503 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் மீண்டும் சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.