நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:06 am IST

பொம்மிடி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாசிக்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (45). இவா், கோவையில் கூலி வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

அப்போது, ஊரில் இருந்த சிலா், வாக்களிக்க பணம் வாங்குவதற்காக அமுதா வந்திருப்பதாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில், அமுதாவை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அமுதா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அமுதா சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த பொம்மிடி போலீஸாா் வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த கோபால் மகன் லோகநாதன் (48), பாரி (66) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த விருதாசலம் (55), சக்திவேல் (52), பிரவீன் (24), நவீன் (23), பிரதீப் (24), பிரேம் (23), குணசேகரன் (48) ஆகியோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.