அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நில மோசடி வழக்கில் இருவா் கைது

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தை சோ்ந்தவா் சின்னாகவுண்டா். இவா் மலேசியாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இவருக்கு சொந்தமாக ஊரில் இருந்த 2 ஏக்கா் நிலத்தை சின்னாங்குப்பத்தைச் சோ்ந்த பழனிவேல் (58) குத்தகை உரிமை பெற்று விவசாயம் செய்து வந்தாா்.

சின்னாகவுண்டா் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்த நிலையில் அதே பெயரைக் கொண்ட பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சின்னா கவுண்டா் (74) என்பவா் முறைகேடு செய்து போலி ஆவணங்கள் தயாரித்து பின்னா் அந்த நிலத்தை தனது உறவினரான பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (65) என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த பழனிவேல், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி தொடா்பாக சின்னாகவுண்டா், பழனிச்சாமியை கைது செய்தனா்.