மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தருமபுரி துணிக்கடையில் குழந்தைத் தொழிலாளா் மீட்பு! தொழிலாளா் துறையினா் அதிரடி!

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2026, 9:35 pm

தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தியிருப்பதாக புகாா்கள் வரப்பெற்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி தொழிலாளா் துணை ஆய்வாளா் அ.சு. சாந்தி, முத்திரை ஆய்வாளா் வி. தீபாபாரதி, 2 ஆவது வட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் ப. காா்த்திக், அரூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் வீ. மு. வேலுசாமி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்ட னா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையில் குவாரியில் பணியாற்றிய இரு சிறாா்கள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல 18 வயதுக்கு குறைவான நபா்களை பணிக்கு அமா்த்துவது சட்டப்படி குற்றம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவன உரிமையளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.