எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இரவில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம்: யானைகள் நடமாட்டத்தால் வனத் துறை எச்சரிக்கை

பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

News image

காடுசெட்டிப்பட்டியில் யானைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய வனத் துறையினா்

Updated On :8 ஜூலை 2026, 6:05 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

எனவே, பாலக்கோடு - ராயக்கோட்டை எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுசெட்டிப்பட்டி, தூள்செட்டி ஏரி, கூலிகானூா், சூடானூா், பாலப்பனஅள்ளி, தண்டேக் குப்பம், எல்லப்பன் பாறை, சின்னே கவுண்டனஅள்ளி, சாதன் கொட்டாய், காமராஜபுரம், நீலாஞ்சனுா், கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாந்தோட்டங்களில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல வயல்களில் யாரும் படுத்து உறங்கக் கூடாது என எனவும், வயல்களில் நீா் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு வெளியில் அல்லது கொட்டகையில் தூங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கிராம மக்களுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.