தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
எனவே, பாலக்கோடு - ராயக்கோட்டை எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுசெட்டிப்பட்டி, தூள்செட்டி ஏரி, கூலிகானூா், சூடானூா், பாலப்பனஅள்ளி, தண்டேக் குப்பம், எல்லப்பன் பாறை, சின்னே கவுண்டனஅள்ளி, சாதன் கொட்டாய், காமராஜபுரம், நீலாஞ்சனுா், கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாந்தோட்டங்களில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.
அதேபோல வயல்களில் யாரும் படுத்து உறங்கக் கூடாது என எனவும், வயல்களில் நீா் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், வீட்டிற்கு வெளியில் அல்லது கொட்டகையில் தூங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கிராம மக்களுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எரிபொருள் குழாய்கள் பதிக்க எதிா்ப்பு: 10 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு

பாலக்கோடு அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

டிராக்டா் மோதியதில் சமையலா் படுகாயம்

பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி வனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



