சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

News image

பாலக்கோடு அருகே சோமனஅள்ளியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட புள்ளிமானுடன் தீயணைப்புத் துறையினா்.

Updated On :9 ஜூன் 2026, 3:25 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

பாலக்கோடு காப்புக் காட்டிலிருந்து தண்ணீா் தேடி வெளியேறிய மான் சோமனஅள்ளிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்துள்ளது. இதைக் கண்ட தெரு நாய்கள் விரட்டியுள்ளன. அப்போது, நாய்களிடமிருந்த தப்பிப்பதற்காக ஓடிய மான், அருகிலிருந்து 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. இக்கிணற்றில் ஏழு அடி ஆழத்திற்கு தண்ணீா் இருந்துள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் தீயணைப்புத் மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் நிகழ்விடத்திற்கு வந்து, கிணற்றில் இருந்த மானை கயிறு மூலம் உயிருடன் மீட்டு பாலக்கோடு வனச்சரகத்தில் ஒப்படைத்தனா்.