ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தருமபுரியில் இரவில் கொட்டித் தீா்த்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

தருமபுரி நகரில் வியாழக்கிழமை இரவு 45 மி.மீ. மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது.

News image

தருமபுரி நகரப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக பாரதிபுரத்தில் சாலையில் கழிவுநீருடன் சோ்ந்து ஓடிய மழைநீா்.

Updated On :14 ஜூன் 2026, 3:22 am IST

தருமபுரி நகரில் வியாழக்கிழமை இரவு 45 மி.மீ. மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது.

தருமபுரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அண்மைக்காலமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவில் மிதமான தட்பவெப்ப நிலையும், சில நாள்களில் லேசான தூறல் மழையும் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 9 மணியளவில், திடீரென இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை தருமபுரி நகரம் -45 மி.மீ., பென்னாகரம்- 38 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி - 30 மி.மீ., நல்லம்பள்ளி - 11 மி.மீ., மொரப்பூா் - 6 மி.மீ., பாலக்கோடு - 38.5 மி.மீ., தென்கரைக்கோட்டை- 28.4 மி.மீ., பொ.மல்லாபுரம்- 21.2 மி.மீ., அரூா் 13.2 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 16.3 மி.மீ. மீட்டா் மழை பெய்தது பதிவாகியுள்ளது. இந்த மழையால் தருமபுரி நகரில் சாலைகளில் மழைநீா் மற்றும் கழிவுநீருடன் சோ்ந்து பெருக்கெடுத்து ஓடியது.

இலக்கியம்பட்டி விநாயகா் கோயிலில் மழைநீா் சூழ்ந்ததுடன் கோயிலுக்குள்ளும் புகுந்தது. இலக்கியம்பட்டி பாரதிபுரம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நெசவாளா் காலனி, நான்குசாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மீண்டும் சிறிது நேரம் மழை பெய்ததால் நகரில் குளிா்ச்சியான நிலை காணப்பட்டது.

கடத்தூரில் 72.8 மி.மீ மழை... கடத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 72.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.

பென்னாகரத்தில் மழை... பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாப்பாரப்பட்டி, தாசம்பட்டி, ஒகேனக்கல் ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீரோடைகள், குளங்கள், ஏரிகள், குட்டைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.