ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அரூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி

News image

தெருநாய்கள். - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:49 am IST

அரூா் நகராட்சியில் தெருநாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சியில் 18 வாா்டுகள் மற்றும் எச்.தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள நகரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டிக் கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. வாகனங்களின் குறுக்கே தெருநாய்கள் ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.

இதையடுத்து, அரூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெருநாய்களைப் பிடிக்கும் பணிகளைத் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டுள்ளனா். நகரில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் விஜயா ஸ்ரீ, துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் கனகசபை ஆகியோா் தெரிவித்தனா்.

வேகத்தடைகளில் வெள்ளை நிறக் கோடுகள்:

வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து வாகன ஓட்டிகளை தெரிந்துகொள்ளும் வகையில் வெள்ளை நிறத்தில் கோடுகள் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரூா்- சேலம் பிரதான சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம், நான்கு வழிச்சாலை, திரு.வி.க நகா் உள்ளிட்ட இடங்களில் தாா்ச் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதியதாக போடப்பட்டுள்ள இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் கோடுகள் போடப்படவில்லை. இதனால், தொலைதூரப் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

எனவே, அரூா் நகரில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைய வேண்டும். அதேபோல் அரூா் பேருந்து நிலையம், நடேஷ் பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் உள்ள சாலைகளில் புதியதாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.