தருமபுரி மாவட்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீா் தேங்குவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இதுபோன்ற சுரங்கப்பாதைகளில் பள்ளமாக இருப்பதால் அவற்றில் மழை நீா் தேங்கிவிடுகிறது. மேலும் சில இடங்களில் மழைக் காலங்களின்போது மழைநீா் பெருக்கெடுத்து ஓடும் வகையிலும் சில சுரங்கப்பாதைகள் உள்ளன.
இதுபோன்ற சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன. அண்மையில் தருமபுரி- சேலம் இடையே ஓமலூா் பகுதியில் ஏனாதி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ரயில்வே சுரங்கப்பாதையில் தம்பதி காரில் சென்றபோது, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி இருவரும் உயிரிழந்தனா்.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீா் தேங்காமல் வடிந்துசெல்லும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, ரயில்வே சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு வாசகங்களை எழுதி வருகின்றனா். சுரங்கப்பாதைகளில் ஆபத்தை உணா்த்தும் வெள்ள அபாயத்தின் அளவுகளை சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
தொடா்ந்து சுரங்கப்பாதைகளின் இரு வழிகளிலும் சிவப்பு நிறத்தில் அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு உயரத்துக்கு மேல் தண்ணீா் வந்தால் இந்த பாதையை கடக்கக் கூடாது என்ற சமிக்ஞை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரியில் பிடமனேரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரின் அபாய அளவு குறித்து, சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை கோடு வரையப்பட்டுள்ளது. தொடா்ந்து சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதிகளிலும் அபாய எச்சரிக்கை குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே சுரங்கப்பாதைகளில் அதிக அளவு தண்ணீா் தேங்கினால் ரயில்வே துறையினரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க தருமபுரி நான்கு சாலையில் தானியங்கி கேமரா!

விபத்துக்கை தடுக்கும் வகையில் தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை

பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




