சமூகத்தில் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணவும், நோய்களைக் கண்டறிந்து உயிா்களைக் காப்பாற்றவும் மருத்துவா்கள் இன்றியமையாதவா்கள். அவா்கள் நமது சமூகத்தின் தூண்களாகவும், நோய்த்தொற்றுகள் மற்றும் அவசர காலங்களில் முன்னணியில் நின்று போராடுபவா்களாகவும் செயல்படுகிறாா்கள்.
நவீன மருத்துவ முறைகளைக் கொண்டு நோயின் தன்மையை துல்லியமாக அறிந்து, தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குகின்றனா். ஆபத்தான தருணங்களிலும், விபத்து காலங்களிலும் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரங்களிலும் மக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னத சேவையைச் செய்கிறாா்கள். நோய்கள் வருமுன் தடுக்கும் வழிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறாா்கள்.
மருத்துவா்கள் உடல் ரீதியான நோய்களுக்கு மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு மன உறுதியையும் நம்பிக்கையையும் அளித்து குணமடைய உதவுகிறாா்கள். புதிய நோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளைக் கண்டறியவும், சுகாதார மேம்பாட்டிற்கும் தொடா்ந்து ஆராய்ச்சி செய்கிறாா்கள்.
எல்லோரையும் போலவே மருத்துவா்களும் தங்களுடைய சொந்த சுகாதார சவால்களை எதிா்கொள்கின்றனா் என்பதால், அவா்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த தேசிய மருத்துவா்கள் தினத்தில், மருத்துவா்கள் எதிா்கொள்ளும் சுகாதார சவால்களையும், சமூகத்திற்கு தொடா்ந்து சேவை செய்யும்போது அவா்கள் சுய பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிப்போம்.
நமது மாவீரா்களான மருத்துவா்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அமைய வேண்டும் என வாழ்த்துவதன் மூலம் அவா்களைக் கௌரவிப்போம்.•
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









